நீண்ட கியூ.. டோல் கேட்களில் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல மத்திய அரசு புது ஐடியா
டெல்லி: புதிதாக உற்பத்தி செய்யப்படும் வாகனங்களில் Radio-Frequency Identification (RFID) இருப்பது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணம் செலுத்த வேண்டியுள்ளதால், டோல் கேட்டுகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிவருகிறது. இதை தவிர்க்க, இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று டெல்லியில் தெரிவித்தார்.
புதிதாக உற்பத்தி செய்யப்படும் வாகனங்களில் இந்த 'கோட்' இருந்தால், டோல்கேட்டுகளை அந்த வாகனம் நிற்காமல் கடந்து செல்ல முடியும் என்றும், வாகனம் கடந்து சென்றதும், 'கோட் ரீடர்' மூலம் ஏற்கனவே வாகன உரிமையாளர் ஃப்ரீபெய்டாக செலுத்தியிருக்கும் பணம் கழித்துக் கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பணமின்றி அனைத்தையும் டிஜிட்டல் மற்றும் வங்கி வழி வர்த்தகமாக்க முயலும் மத்திய அரசின் மற்றொரு நகர்வு இந்த திட்டம் என கூறப்படுகிறது.