சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்றுவிட்டு 'ஹாயாக' திரும்பும் 2-வது வீடியோ ரிலீஸ்!
பெங்களூரு சிறையைவிட்டு வெளியே சென்று ஷாப்பிங் செய்துவிட்டு சசிகலா திரும்பும் புதிய வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
பெங்களூரு: சிறையில் இருந்து சாதாரண உடையில் சசிகலாவும் இளவரசியும் வெளியே சென்றுவிட்டு திரும்பும் 2-வது வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சிறையில் சசிகலா, இளவரசி இருவரும் சொகுசாக இருப்பதாகவும் தனி ராஜ்யமே நடத்துவதாகவும் சிறை அதிகாரி ரூபா அரசுக்கு அளித்தது பெரும் புயலை கிளப்பியது. அத்துடன் சசிகலாவும் இளவரசியும் சிறையில் இருந்து வெளியே போய் ஷாப்பிங் செய்துவிட்டு திரும்பும் வீடியோவும் வெளியானது.
விசாரணைக்கு உத்தரவு
மேலும் சிறைக்குள் சசிகலா 5 அறைகளை பயன்படுத்தியது; சிறை அதிகாரி அலுவலகத்தில் அமர்ந்து பார்வையாளர்களை சந்திப்பது; பார்வையாளர் நேரத்துக்கு பின்னரும் சசிகலாவை உறவினர்கள் சந்தித்தது என அடுக்கடுக்கான விவகாரங்கள் அம்பலமாகின. இது தொடர்பாக கர்நாடகா அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.
ஆதாரங்களை தாக்கல் செய்த ரூபா
விசாரணை அதிகாரி வினய்குமார் பெங்களூரு சிறையில் ஆய்வு நடத்தினார். இந்த விசாரணையின் ஒருபகுதியாக கடந்த சனிக்கிழமையன்று வினய்குமார் முன்பாக ரூபா ஏராளமான ஆதாரங்களைத் தாக்கல் செய்தார்.
புதிய வீடியோ ரிலீஸ்
அதில் புதிய வீடியோக்களும் இடம்பெற்றிருந்தன. அந்த வீடியோவில் சசிகலாவும் இளவரசியும் சாதாரண உடையில் வெளியே இருந்து பைகளுடன் சிறையின் மெயின் கேட் வழியாக உள்ளே நுழையும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் ஆண் கைதிகள், போலீசாரும் நடமாடுவதும் இடம்பெற்றுள்ளது.
74 ஆதாரங்கள்
இது போல் மொத்தம் 74 ஆதாரங்களை ரூபா தாக்கல் செய்திருக்கிறார். மேலும் பார்வையாளர்கள் சந்திக்கும் இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய வேண்டும் எனவும் ரூபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.