For Daily Alerts
Just In
பிரிட்டீஷ் கால நடைமுறைக்கு குட் பை.. மத்திய அரசின் பட்ஜெட் ஜனவரியிலேயே தாக்கல்?
டெல்லி: பிரிட்டீஷ் காலத்து நடைமு்றையை மாற்றிவிட்டு, ஜனவரி மாதம் நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. பிரிட்டீஷ் காலத்து நடைமுறை இதுவாகும். ஆனால், மே மாதம்தான் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது நடைமுறை.
இதனால் அந்த நிதியாண்டின் அனைத்து பணிகளும் தாமதமாகின்றன. இதை கருத்தில் கொண்டு, ஜனவரி இறுதியில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் தேதியை இறுதி செய்யவில்லை எனவும், ஆனால் இதுபற்றி விவாதிக்கப்பட்டு வருவதாகவும் நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பட்ஜெட் தயாரிப்பு ஆலோசனைகளை, நிதி அமைச்சர் வரும் அக்டோபர் மாதத்திலேயே தொடங்க வேண்டியது கட்டாயமாகும்.
Comments
English summary
The government is looking to change the British-era legacy of presenting the Union Budget+ on the last day of February and may advance the date by a month.
Story first published: Monday, August 22, 2016, 11:42 [IST]