For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புல்வாமா தாக்குதல்:13500 பக்க என்ஐஏ சார்ஜ் ஷீட் தாக்கல்-மசூத் அசார் உட்பட 19 பேர் மீது குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

ஜம்மு: 40 ராணுவ வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜம்மு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் உட்பட 17 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Recommended Video

    Pulwama Case: NIA files Charge Sheet | OneIndia Tamil

    கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். படையினர் சென்ற வாகன தொடரணி மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    தேசத்தையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் இன்று ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    ரஷ்யாவின் மற்றொரு கொரோனா தடுப்பூசியும் சக்சஸ்.. முதல் கட்ட டிரையலில் பாஸ்ரஷ்யாவின் மற்றொரு கொரோனா தடுப்பூசியும் சக்சஸ்.. முதல் கட்ட டிரையலில் பாஸ்

    13,500 பக்கம் குற்றப்பத்திரிகை

    13,500 பக்கம் குற்றப்பத்திரிகை

    13,500 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசார்தான் முதன்மை குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மசூத் அசாருடன் சேர்த்து மொத்தம் 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் மசூத் அசாரின் சகோதரர்கள் அப்துல் ரவூப் அஸ்கர், அம்மார் அல்வி, உறவினர் உமர் பரூக் ஆகியோரும் அடங்குவர்.

    யார் இந்த உமர் பரூக்?

    யார் இந்த உமர் பரூக்?

    இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள மசூத் அசாரின் உறவினரான உமர் பரூக், இந்திய விமானத்தை கந்தகாருக்கு கடத்திய பயங்கரவாதி இப்ராஹிம் ஆதரின் மகன். இந்தியாவுக்குள் ஊடுருவி புல்வாமா தாக்குதலை செயல்படுத்தியது உமர் பரூக்தான். காஷ்மீரில் 2019 மார்ச் மாதம் நடந்த மோதல் ஒன்றில் பாதுகாப்புப் படையினரால் உமர் பரூக் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    பயங்கரவாதிகள் படங்கள்

    பயங்கரவாதிகள் படங்கள்

    புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள், மசூத் அசார் உள்ளிட்டோருடன் செல்போன்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசியது, சமூக வலைதளங்களில் மேற்கொண்ட உரையாடல்கள் ஆகியவையும் சாட்சியங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகளான உமர் பரூக், சமீர் அஹமத் மற்றும் அதில் அகஹமது தார் ஆகியோரது படங்களையும் குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ. இணைத்திருக்கிறது.

    என்கவுண்ட்டரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

    என்கவுண்ட்டரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

    இவர்களில் அதில் அகஹமது தார், வெடிகுண்டு நிரம்பிய காரை பாதுகாப்பு படையினர் வாகனம் மீது மோதிய தற்கொலைப்படை தீவிரவாதி. மேலும் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 17 தீவிரவாதிகளில் 6 பேர் பாதுகாப்புப் படையினரால் மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் உமர் பரூக், முகமது கம்ரான் அலி, யாசிர் ஆகிய 3 பேர் பாகிஸ்தானியர்கள்.

    English summary
    NIA has filed 13,500 pages charge sheet in Pulwama attack case before Jammu Special NIA Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X