காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி.. 11 இடங்களில் திடீர் ரெய்டு
காஷ்மீரில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஜம்மு: காஷ்மீரில் 11 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானம் இந்திய விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பின்லேடன் விஷயத்தில் அமெரிக்கா எவ்வாறு நடந்து கொண்டதோ அதேபோன்ற நடவடிக்கை எடுக்க இந்தியாவும் தயார் என்று அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானம் இந்திய விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதன் காரணமாக எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இதனால் போர் மூளும் சூழலும் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் காஷ்மீரில் தேசிய புலனாய்வு ஏஜென்சி 11 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது குறிப்பாக தெற்கு காஷ்மீரில் தங்கியிருக்கும் பிரிவினவாத தலைவர்களின் இருப்பிடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.