நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயாவை 6 பேர் கும்பல் கூட்டாக பலாத்காரம் செய்தது. பின்னர் நிர்பயாவை ஓடும் பேருந்தில் இருந்து அந்த கும்பல் தூக்கி வெளியே வீசியது.
இது தொடர்பாக 18 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் சிறையில் தற்கொலை செய்துகொண்டனர். இளம்குற்றவாளி கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.
எஞ்சிய 4 பேருக்கும் கீழ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இது காட்டுமிராண்டித்தனமான படுகொலை என கூறி 4 பேருக்குமான தூக்கு தண்டனையை உறுதி செய்தது.