For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயாவை 6 பேர் கும்பல் கூட்டாக பலாத்காரம் செய்தது. பின்னர் நிர்பயாவை ஓடும் பேருந்தில் இருந்து அந்த கும்பல் தூக்கி வெளியே வீசியது.

Nirbhaya's killers will hang to death says Supreme Court

இது தொடர்பாக 18 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் சிறையில் தற்கொலை செய்துகொண்டனர். இளம்குற்றவாளி கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.

எஞ்சிய 4 பேருக்கும் கீழ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இது காட்டுமிராண்டித்தனமான படுகொலை என கூறி 4 பேருக்குமான தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

English summary
Nirbhaya's killers will hang to death the Supreme Court has held. The Supreme Court on Friday confirmed the death sentenced awarded to the four killers of Nirbhaya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X