எல்லோரும் இந்தியில்.. நிர்மலா சீதாராமன் உள்பட 3 பேர் மட்டும் ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம்!
குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்ட 9 அமைச்சர்களில் நிர்மலா சீதாரமன் உள்பட மூன்று பேர் ஆங்கிலத்தில் பதவியேற்றனர்.
டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்ட 9 அமைச்சர்களில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 3 பேர் மட்டும் ஆங்கிலத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இன்று காலை 10.30 மணியளவில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதில், வர்த்தகத்துறை இணையமைச்சராக பதவிவகித்து வந்த நிர்மலா சீதாராமன் கேபினட் அமைச்சராக பொறுப்பெற்ற போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது நிர்மலா இந்தியில் பதவியேற்பார் என்று எதிர்பார்த்த போது ஆங்கிலத்தில் பதவியேற்றார்.
அதேபோல் இணையமைச்சர்களாக பதவியேற்ற ஹக்தீப் சிங் பூரி, மற்றும் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.ஜே. அல்போன்ஸ் எம்.பி ஆகிய இருவரும் ஆங்கிலத்தில் பதவியேற்றுக்கொண்டார்கள்.
இவர்களில் நிர்மலா சீதாராமன் மற்றும் கே.ஜே அல்போன்ஸ் இருவரும் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.