சர்ச்சையில் ராணுவ தளபதி- யார் எதையோ சொன்னதுக்கு என் கருத்து எதுக்கு? நிர்மலா சீதாராமன் சீற்றம்
ராணுவ தளபதியின் சர்ச்சை பேச்சுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என சீறிவிட்டார் நிர்மலா சீதாராமன்,
Recommended Video
லக்னோ: முஸ்லிம்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ராணுவ தளபதி பிபின் ராவத். ஆனால் ராணுவ தளபதி பேசியது குறித்து தாம் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சீறியுள்ளார்.
"அஸ்ஸாம் மாநிலத்தில் பல மாவட்டங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அஸ்ஸாமில் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்) பாஜகவை விட கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. 1984 லோக்சபா தேர்தலில் பாஜக 2 இடங்களில்தான் வென்றிருந்தது" என்பது ராணுவ தளபதி பிபின் ராவத்தின் பேச்சு.
அகதிகள் இடம்பெயருதல்
மேலும் வங்கதேசத்தில் இருந்து அகதிகள் ஊடுருவல் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. அகதிகள் இடம்பெயருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் பிபின் ராவத் கூறியிருந்தார்.
ராணுவ தளபதியின் அரசியல் பேச்சு
இப்பேச்சுக்கு ஏஐயுடிஎப் தலைவர் பக்ருதீன் அஜ்மல் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ராணுவ தளபதியின் அரசியல் பேச்சு சர்ச்சையானது.
நிர்மலா சீதாராமனிடம் கேள்வி
இதனிடையே லக்னோவில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ராணுவ தளபதியின் பேச்சு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
சீறிய நிர்மலா சீதாராமன்
இதற்கு, நான் எதற்கும் கருத்து சொல்ல மாட்டேன். யாரோ சிலர் எதைப் பற்றியோ பேசுகிறார்கள். அதற்கு நான் ஏன் கருத்து தெரிவிக்க வேண்டும் என சீறியிருக்கிறார். ராணுவ தளபதி மீது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,