For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யூடியூப்பில் தினமும் தோன்றி பேசி வரும் நித்யானந்தா.. இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    புதிய வீடியோவில் போலீஸையே கலாய்த்த நித்தி

    அஹமதாபாத்: போலீசார் நித்யானந்தாவை வலைவீசி தேடிவரும் நிலையில் அவர் தினமும் யூடியூப் வீடியோவில் தோன்றி பேசி வருகிறார். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சாமியார் நித்யானந்தா மீது 2010ம் ஆண்டு தொடரப்பட்ட பலாத்கார வழக்கு மற்றும் இந்த ஆண்டு தொடரப்பட்டுள்ள குழந்தைகள் கடத்தல் வழக்கு ஆகியவற்றில் கைது செய்து விசாரிப்பதற்காக குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநில போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    ஆனால் இதுவரை போலீசிடம் நித்தியானந்தா சிக்கவில்லை. அதேநேரம் தனது யூடியூப் சேனலில் தினமும நித்தியானந்தா ஆன்மீக உரையாற்றி வருகிறார்.

    பதவி போன ஒரே நாளில் மாற்றம்.. கிரிமினல் வழக்குகளை மறைத்த வழக்கில் பட்னாவிஸ்க்கு சம்மன்பதவி போன ஒரே நாளில் மாற்றம்.. கிரிமினல் வழக்குகளை மறைத்த வழக்கில் பட்னாவிஸ்க்கு சம்மன்

    பேக்ரவுண்ட் மாற்றம்

    பேக்ரவுண்ட் மாற்றம்

    நித்யானந்தா யூடியூப் வீடியோவில் தோன்றி பேசினாலும் அவர் எந்த இடத்தில் இருந்து பேசுகிறார் என்பது தெரியவில்லை. ஏனெனில் கிரீன்மேட் தொழில்நுட்பத்தில் பேசும் வீடியோ எடுக்கப்பட்டு பின்னர் வேறு விடியோ திரைகள் ( பேக்ரவுண்ட்) அங்கு வைக்கப்படுகிறது.

    துன்புறுத்தும் சக்திகள்

    துன்புறுத்தும் சக்திகள்

    நித்தியானந்தா தனது அந்த வீடியோவில் ஆன்மீகம் குறித்து பேசுகிறார். அத்துடன் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், கடந்த 20 ஆண்டுகளில் ‘சத்சங்'களை தொடர்ந்து வழங்கி வருவது எப்படி, இப்போது தன்னை துன்புறுத்தும் வெளிப்புற சக்திகள் எப்படிஇருக்கிறார்கள் என்பது உள்ளிட்டவற்றை விவரிக்கிறார்.

    இமயமலையில் உள்ளேன்

    இமயமலையில் உள்ளேன்

    நவம்பர் 28 அன்று, நித்யானந்தா மதியம் 1.30 மணியளவில் யூடியூபில் நேரலை வீடியோவில் பேசியுள்ள நித்தியானந்தா, "எனக்கு எதிராக சிலர் இருக்கிறார்கள், அவர்கள் அவர்கள் என்னைத் தேடுகிறார்கள், ஆனால் நான் இமயமலையில் கைலாயத்தில் இருக்கிறேன்" என்று கூறினார். மேலும் இதற்காக யாரும் "எதிர்வினையாற்ற வேண்டாம்" என்றும் சொல்கிறார். 90 நிமிடங்கள் நீளமுள்ள இந்த வீடியோ,அவரது யூடியூப் சேனலில் உள்ள மற்ற வீடியோக்களைப் போலவே உள்ளது. அந்த வீடியோ கிரின்மேட்டில் எடுக்கப்பட்டு பின்னர் இமயமலை மானசரோவர் திரை வைக்கப்பட்டுள்ளது.

    நான் பரம சிவன்

    நான் பரம சிவன்

    மற்றொரு வீடியோவில், "நான் பரம சிவன். புரிந்து கொள்ளுங்கள், உண்மையை வெளிப்படுத்தியதற்காக எந்த நீதிமன்றமும் என்னைத் தண்டிக்க முடியாது " என்று நித்யானந்தா கூறியுள்ளார். இன்னொரு வீடியோவில், "ஒவ்வொரு முறையும் நாங்கள் அனைத்து சட்ட விவகாரங்கள் மற்றும் சட்ட தாக்குதல்களிலிருந்து தப்பி வருகிறோம்" என்று அவர் கூறுகிறார்.

    பல வீடியோக்கள்

    பல வீடியோக்கள்

    கடந்த ஒரு வாரத்தில் வெளியிடப்பட்ட பெரும்பாலான வீடியோக்களில், உலகில் எந்த இடத்தையும் அவர்களுக்குத் தெரியுமா (நான் இருக்கும் சில ஏக்கர் இடம் உள்பட) ? என்று அவர் தனது பக்தர்களிடம் கேட்கிறார், அத்துடன் தன்னை எங்குமே இப்படி துன்புறுத்த மாட்டார்கள் என்ற வேதனை தெரிவித்துள்ளார்.

    நித்தி ஓட்டம்

    நித்தி ஓட்டம்

    ஆனால் நித்தியானந்தா வெளியிட்ட எந்த வீடியோக்களிலும் அவரது இருப்பிடம் குறித்த எந்த அறிகுறியும் இல்லை. அவர் மீதான குழந்தை கடத்தல் வழக்கை விசாரிக்கும் குஜராத் போலீசார், அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம், தென் அமெரிக்காவில் எங்காவது இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

    English summary
    nithyananada makes regular appearances on you tube, police believe that he may have left the country and could be somewhere in South America.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X