நோ சொன்ன நயன்தாரா… மனம் தளராத நித்தி ஸ்வேதாவுக்கு தூது
பிடதி: நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து வந்த அழைப்புக்கு நயன்தாரா நோ சொன்னதை அடுத்து மனம் தளராத நித்யானந்தா,வட இந்திய நடிகை ஸ்வேதா திவாரிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வசீகர அழகியான ஸ்வேதா, வட இந்தியாவில் மிகப் பெரிய சின்னத்திரை பிரபலம். இரண்டு தடவை திருமணம் ஆனவர். சின்னத்திரையில் மட்டுமல்லாமல், மராத்தி, பஞ்சாப், இந்திப் படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும், ஐட்டம் டான்ஸிலும் ஸ்வேதா கால் பதித்தார். இது அவரது கணவர் ராஜசௌத்ரிக்குப் பிடிக்காததால், விவாகரத்து பெற்றார்.
நம்பர் ஸ்வேதா திவாரி
ரியாலிட்டி ஷோவில் நம்பர் ஒன்னாகத் திகழ்ந்த ஸ்வேதாவுக்கு ஒரு எபிஸோடுக்குச் சம்பளம் பத்து லட்சம்! ‘ஜலக் திக்லா ஜா' என்னும் ரியாலிட்டி ஷோவில் அபினவ் கோலி என்பவரைக் காதலிக்க ஆரம்பித்து, அவரைக் கரம் பிடித்து, வட இந்திய சீரியல்களில் இப்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் ஸ்வேதா திவாரி.
பணம் சம்பாதித்தது போதும்
‘‘பணம் சம்பாதிக்கும் முயற்சியில் மகளின் அருகாமையை இத்தனை நாள் இழந்து விட்டேன். போதும் போதும் என்கிற அளவு பணம் சம்பாதித்து விட்டேன்; இனிமேல் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடப் போவதில்லை என்று சமீபத்தில் ஸ்டேட்மென்ட் விட்டார் ஸ்வேதா.
மகளுக்காக வாழப்போறேன்
என் 13 வயது மகளின் வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்!'' என்று அண்மையில் ஒரு பிரபல ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி கொடுத்தார் ஸ்வேதா திவாரி.
எங்க கிட்ட வாங்க
ஸ்வேதாவின் பேட்டியைப் படித்த நித்தி தரப்பு, மன அமைதிக்கு கேரன்ட்டி தருவதாக அம்மணிக்குத் தூது விட்டிருக்கிறது. நயன்தாரா இல்லாட்டி ஸ்வேதா... இது எப்படி இருக்கு?