எனக்கு எதிராக சர்வதேச சதி.. களத்தில் இறங்கி கடவுள் காப்பாற்றி வருகிறார்.. புது வீடியோவில் நித்தி!
டெல்லி: தென் அமெரிக்காவின் ஈக்வடார் அருகே குட்டி தீவில் உள்ள நித்யானந்தா தனக்கு எதிராக சர்வதேச அளவில் சதி நடைபெற்று வருவதாக ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பெங்களூருவை அடுத்த பிடதியில் நித்யானந்தாவின் தியான பீடம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதையடுத்து வெளிநாடுகளிலும் கிளைகளை தொடங்கினார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் குழந்தைகள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் நித்யானந்தாவுக்கு எதிராக உள்ளன. தற்போது அவர் தென் அமெரிக்காவின் ஈக்வடார் தீவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மேட்டுப்பாளையம்: சுவர் இடிந்த விபத்தில் இறந்த இரு குழந்தைகளின் கண்களை தானமாக கொடுத்த தந்தை
முதன்மை மொழி
வெளிநாட்டில் இருக்கும் நித்தி, தற்போது தனக்கென தனியாக ஒரு நாட்டை உருவாக்கியதாகவும் அதற்கு நித்யானந்தா கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த நாட்டிற்கான தனி கொடி, பாஸ்போர்ட்டையும் முதன்மை மொழியாக ஆங்கிலத்தையும் அறிவித்துள்ளார்.
தேசதுரோக வழக்குகள்
கைலாசாவை சட்ட ரீதியாக உலகம் முழுவதும் பிரகடனப்படுத்தும் சட்டப்பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது தேசதுரோக வழக்குகள் பாயும் என கூறப்படுகிறது.
பயமுறுத்த
இந்த நிலையில் தற்போது பரபரப்பாக மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில் நான் ஒரு புறம்போக்கு, பரதேசி. இந்த உலகில் என்னை பயமுறுத்த எவராலும் முடியாது.
கடவுளே
என்னையும் எனது பீடத்தையும் கடவுளே களம் இறங்கி நேரடியாக காத்து வருகிறார். எனக்கு எதிராக அத்தனை செயல்களும் ஆவணப்படுத்தப்படுகின்றன. சர்வதேச சமூகம் அதை கவனித்துக் கொண்டிருக்கிறது என்றார்.