Breaking News: மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
தெலுங்கு தேசம் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மத்திய பாஜக அரசு எளிதாக வென்றுவிட்டது. அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் பதிவாகின. மொத்தம் 451 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். அதிமுகவும் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
காங்கிரஸ் கண்களை பார்த்து பேசியவர்கள் நிலை என்ன ஆனது என்று தெரியும்
நாங்கள் நாட்டின் பணியாளர்கள், நீங்கள் (காங்கிரஸ்) நாட்டை விற்பவர்கள்-மோடி பேச்சு
ராகுலின் கண்கள் என்ன செய்யும் என்பதை இந்த நாடே இன்று பார்த்துவிட்டது-மோடி
ராகுல் காந்தி தனது கண்ணை பார்த்து பேச கூறியதற்கு மோடி பதிலடி
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மீதும் எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பினர்
ராணுவ தளபதியை கூட எதிர்க்கட்சிகள் தவறாக பேசியுள்ளனர்- மோடி ஆவேசம்
நீங்கள் என்னை என்னவேண்டுமானாலும் அவமானகரமாக பேசிக்கொள்ளுங்கள்
இந்திய ராணுவத்தை பற்றி தவறாக பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்
இந்திய ராணுவத்தை பற்றி தவறாக பேசுவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்- மோடி
தவறான வழிக்கு செல்லவிருந்த ரூ.90 ஆயிரம் கோடி அரசு பணத்தை தடுத்துள்ளோம்-மோடி
4500 பினாமி சொத்துக்களை அரசு கைப்பற்றியுள்ளது
கருப்பு பணத்திற்கு எதிரான போர் தொடரும்
இன்னும் கூட அரசு மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லையாம்- மோடி கிண்டல்
காங்கிரசுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை, எனவேதான் அரசையும் நம்பவில்லை-மோடி
13 கோடி இளைஞர்களுக்கு தொழில் துவங்க கடன் வழங்கியுள்ளோம்
தெலுங்கு தேச உறுப்பினர்களின் அமளிக்கு நடுவே மோடி உரை
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் ஏழைகளுக்கும் சிறப்பான சிகிச்சை கிடைக்கிறது
விவசாயிகள் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம்- மோடி
15 கோடி மக்களுக்கு மண் பரிசோதனை அட்டை தரப்பட்டுள்ளது
கடந்த 2 வருடங்களில் 5 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் கொண்டுவரப்பட்டுள்ளனர்
யூரியா பற்றாக்குறை இப்போது இந்தியாவில் கிடையாது- மோடி
அரசின் சாதனைகளை பட்டியலிடுகிறார் பிரதமர் மோடி
மோடியை பேச விடாமல் லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
This is not a floor test of the Government, this is a forced test of Congress's so called allies: PM Modi in Lok Sabha #NoConfidenceMotion pic.twitter.com/nQtzt1yfgl
— ANI (@ANI) July 20, 2018
என்னை பிரதமர் பதவியில் அமர வைத்தது 125 கோடி மக்கள்-மோடி பேச்சு
அதிகாரப் பசியின் காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை உறுப்பினர்கள் தோற்கடிக்க வேண்டும்- மோடி பேச்சு