For Daily Alerts
Just In
காமன்வெல்த்: பிரதமர் செல்வது பற்றி முடிவு எடுக்கவில்லை- சல்மான் குர்ஷித் பங்கேற்பு!!
டெல்லி: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அக்பருதீன், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பாரா? இல்லையா? என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும்.
இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார். யாழ்ப்பாணத்துக்கு இந்திய குழு செல்வது பற்றியும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
Comments
commonwealth summit sri lanka tamilnadu prime minister manmohan singh salman khurshid காமன்வெல்த் மாநாடு இலங்கை தமிழகம் பிரதமர் மன்மோகன்சிங் சல்மான் குர்ஷித்
English summary
The External Affairs Ministry said, No decision yet on PM's visit to Sri Lanka for CHOGM but MInister Salman Khurshid will attend in the CHOGM scheduled on November 15, Sri lanka.
Story first published: Saturday, November 9, 2013, 12:40 [IST]