ரயில்வே பட்ஜெட்: பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை- புதிய ரயில்களும் இல்லை
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் உயர்வு இடம்பெறவில்லை. அதேபோல் புதிய ரயில்களும் அறிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ரயில்வே துறையின் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதேபோல் ரயில் பயணிகளுக்கான வசதிகளை நவீனப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன. அதே நேரத்தில் கடந்த பட்ஜெட்டைப் போலவே பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் உயர்வு எதுவும் இடம்பெறவில்லை.
மேலும் புதிய ரயில்கள் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை. கடந்த பட்ஜெட்டிலும் முந்தைய ரயில்வே திட்டங்களுக்குத்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. புதிய ரயில்கள் அறிவிக்கப்படவில்லை.
வழக்கமாக ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் இடம்பெறும். ஆனால் மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின்னர் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு 2-வது முறையாக இடம்பெறவில்லை.