"காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்"
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வதந்தி பரவி வருவதால் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுமுறை கிடையாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அமர்நாத் யாத்திரைக்கு வந்துள்ள பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் பள்ளத்தாக்கை விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி என்பதாலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் என்பதாலும் பள்ளத்தாக்கு பகுதியில் உயர் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
இதற்காக ஏராளமான சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு அளிக்கப்படாது என்றும் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து செய்யப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.