For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.4.5 கோடி நகை எல்லாம் திருடு போகவில்லை: நடிகை ரம்பாவின் சகோதரர்

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தங்கள் வீட்டில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்புள்ள நகைகள் திருடு போகவில்லை என்று நடிகை ரம்பாவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் கோலிவுட்டின் முன்னணி நாயகியாக இருந்தவர் ரம்பா. மார்க்கெட் சரிந்த பிறகு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். ஏற்கனவே ஒரு பெண் குழந்தைக்கு தாயான ரம்பா தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளாராம்.

No jewels missing from our home: Rambha's brother

இந்நிலையில் அவரின் ஹைதராபாத் வீட்டில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்புள்ள நகைகள் திருடுபோயுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து ரம்பாவின் ஹைதராபாத் வீட்டில் வசித்து வரும் அவரது சகோதரர் கூறுகையில்,

நகை திருட்டுப் போனது பழைய செய்தியாகும். இந்த வழக்கு பற்றி சென்னை மற்றும் ஹைராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் போலீசார் விசாரணை நடந்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த விசாரணை பற்றிய செய்தியை தவறாக புரிந்து கொண்டு தற்போது நகைகள் திருடுபோயுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள். எங்கள் வீட்டில் நகை எதுவும் திருடு போகவில்லை என்றார்.

English summary
Rambha's brother told that the news about jewellery theft in his actress sister's house is not true.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X