காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் போகாததற்குப் பல காரணங்கள்- குர்ஷித்
டெல்லி: இலங்கையில் தொடங்கும் காமன்வெல்த் மாநாட்டுக்குப் பிரதமர் போகாததை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அனைத்து காமன்வெல்த் மாநாடுகளுக்கும் பிரதமர் போவதில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பிரதமரின் முடிவை ஒரே கோணத்தில் பார்க்கத் தேவையில்லை. அனைத்து காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டுக்கும் பிரதமர் போவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பல பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். இது போக பலவேறு முக்கியப் பிரச்சினைகள் பிரதமர் முன்பு உள்ளது. எனவே பிரதமரின் பயணம் ரத்துக்கு ஒரே காரணத்தைப் பார்க்கக் கூடாது. பல காரணங்கள் இதில் உள்ளன.
இலங்கையுடன் இந்தியாவுக்கு ஆழமான நட்பும், உறவும் உள்ளது. எனவே இந்த ஒரு விவகாரத்தால் அதில் மாற்றமோ, பாதிப்போ வராது என்று நான் கருதுகிறேன் என்றார் குர்ஷித்.