For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்... மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடி

விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் 9000 கோடி ரூபாய்க்கு மேல் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் உள்ளார். அவர் தற்போது லண்டனில் தங்கியுள்ளார். அந்நிய செலாவணி, காசோலை மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. பல நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பித்துள்ளன.

 Non-bailable warrant against mallya: special court in Mumbai

இதனால் இந்தியா திரும்பினால் நிச்சயம் கைது செய்யப்பேடுவோம் என்ற அச்சத்தால் மல்லையா நாடு திரும்பால் லண்டனிலேயே உள்ளார். மும்பை சிறப்பு நீதிமன்றம் அண்மையில் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததோடு இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அனுமதியளித்தது.

இந்நிலையில் விஜய் மல்லையா மீது சிபிஐ தொடர்ந்த கறுப்புப்பண மோசடி வழக்கில்அவர் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை கைது செய்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

English summary
Mumbai special court issued Non - bailable warrant against vijjay malllya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X