விதிகளை மீறுவதுன்னா வட இந்தியர்களுக்கு செம குஜால்- அமைச்சர் ரிஜிஜூ பேச்சு; கேஜ்ரிவால் கொந்தளிப்பு!
டெல்லி: விதிகளை மீறுவதில் வட இந்தியர்கள் மகிழ்ச்சியடைவதுடன் அதையே தங்களுடைய வழக்கமாக வைத்துக் கொள்கிறார்கள் என்று நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்த கருத்தால் சர்ச்சை உருவாகி உள்ளது. ரிஜிஜூ கருத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகையில், வடஇந்தியர்கள் விதிகளை மீறுவதையே தங்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதில் மகிழ்ச்சி அடைகின்றனர்..
போலீசார் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வதாக பொதுமக்கள் பலர் குற்றம் சுமத்துகின்றனர். போலீசார் அனைவரிடமும் கண்டிப்புடன் நடந்து கொள்ள மாட்டார்கள் என்றார்.
ரிஜிஜூவின் பேச்சுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியர்களை வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என பிரிக்க வேண்டாம் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் கேஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.