For Daily Alerts
Just In
தென் மாநிலங்களில் வட இந்தியர் எண்ணிக்கை அதிகரிப்பு- தென்னிந்தியர் வடக்கே குடியேறுவது குறைகிறது
தென் மாநிலங்களில் வட இந்தியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Recommended Video
இந்திய மொழிகளிலேயே இந்தி தான் அதிகம் பேசப்படுகிறது- வீடியோ
டெல்லி: தென்னிந்தியாவில் வட இந்தியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் வட இந்தியாவில் தென்னிந்தியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தும் வருகிறது என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிப்பது:
- தமிழர்களும் மலையாளிகளும் கர்நாடகாவுக்கு கணிசமான அளவு இடம்பெயர்ந்துள்ளனர்.
- தென்னிந்தியர்கள் ஒருகாலத்தில் மகாராஷ்டிராவுக்கு முன்னர் இடம்பெயர்ந்தனர். குறிப்பாக மும்பைக்கு சென்றனர். ஆனால் தற்போது கர்நாடகாவுக்கு அதிகம் செல்கின்றனர்.
- உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவுக்கு இடம்பெயரும் மலையாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குர்கானில் தமிழர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
- டெல்லியில் குடியேறும் தமிழர்கள், மலையாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
- தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இந்தி மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறி உள்ளனர்.
- தென்னிந்தியாவில் நேபாளிகளின் குடியேற்றமும் அதிகரித்துள்ளது.
- வட மாநிலங்களில் தமிழர்கள் குடியேறுவது 2001-ல் 8.2 லட்சமாக இருந்தது. இது 2011-ல் 7.8 லட்சம்.
- வடக்கே மலையாளிகள் குடியேறுவது 2001-ல் 8 லட்சமாக இருந்தது 7.2 லட்சம் என குறைந்திருக்கிறது.
- தென்னிந்தியாவில் 58.2 லட்சமாக இருந்த வட இந்தியர் எண்ணிக்கை 77.5 லட்சமாகி இருக்கிறது.
Comments
English summary
According to the 2011 census data that reverse migration trend within the South India to North States.
Story first published: Thursday, June 28, 2018, 19:08 [IST]