வடமாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் புழுதி புயல்.. கனமழை ஆபத்து.. எச்சரிக்கும் வானிலை மையம்
வடமாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் புழுதி புயல் வீசும் ஆபத்து உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video
டெல்லி: வடமாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் புழுதி புயல் வீசும் ஆபத்து உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வட இந்தியா முழுவதும் கடுமையான கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென புழுதி புயல் வீசியது.
இதைத்தொடர்ந்து இடியுடன் பலத்த மழையும் கொட்டித் தீர்த்தது. மணிக்கு பல கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த பயங்கர புயலால் இரு மாநிலங்களுக்கு உட்பட்ட பல மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.
|
மரங்கள் சாய்ந்தன
பல இடங்களில் வீடுகளின் கூரைகள் பறந்தன. குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் வேறோடு சாய்ந்தன
இதுவரை 126 பேர் பலி
திடீரென வீசிய இந்த புழுதி புயல் மற்றும் அதைத்தொடர்ந்து பெய்த இடி-மழையால், வீடுகளில் இருந்த மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதனால் இவதுரை 126 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
வானிலை மையம் எச்சரிக்கை
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் புழுதி புயல் அடிக்கலாம் எனவும் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர், இமாசலபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநில மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை மையம் கேட்டுகொண்டுள்ளது.
7ஆம் தேதியும் புழுதிபுயல்
இது போல் வரும் ஏழாம் தேதி திங்கள்கிழமையும் மேற்கூறிய பகுதிகளிலும், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மாநிலங்களிலும் மழை, புழுதிபுயல் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்பு
இதனால் பொது மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்குமாறும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.ங மேலும் தமிழ்நாடு, கேரளா போன்ற இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.