எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ தயாராக இல்லை... 15-ஆம் தேதி வரை பொறுங்கள்... தேவகௌடா
எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ தயாராக இல்லை என்றும் 15-ஆம் தேதி வரை பொறுத்திருங்கள் என்றும் தேவகௌடா கூறியுள்ளார்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகா மாநில தேர்தலில் தொங்கு சட்டசபை என்பது குறித்து எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ தயாராக இல்லை என்றும் 15-ஆம் தேதி வரை பொறுத்திருங்கள் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகௌடா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 15-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 222 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என உற்று நோக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நடைபெற்றது. இதில் தொங்கு சட்டசபையே ஏற்படும் என்றும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கணிக்கப்பட்டது.
மேலும் கௌடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தொங்கு சட்டசபை ஏற்பட்டால் யாருக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்று தேவகௌடாவின் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் கூறுகையில் தற்போது நான் எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ தயாராக இல்லை. 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வரை பொறுத்திருங்கள். உண்மை நிலவரம் அன்று தெரியவரும் என்று கூறினார்.
வாக்களித்த தினமான சனிக்கிழமை கௌடாவிடம் கேட்டபோது நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். தனித்து ஆட்சி அமைப்போம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.