For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ தயாராக இல்லை... 15-ஆம் தேதி வரை பொறுங்கள்... தேவகௌடா

எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ தயாராக இல்லை என்றும் 15-ஆம் தேதி வரை பொறுத்திருங்கள் என்றும் தேவகௌடா கூறியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் கட்சியுடன் ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகா மாநில தேர்தலில் தொங்கு சட்டசபை என்பது குறித்து எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ தயாராக இல்லை என்றும் 15-ஆம் தேதி வரை பொறுத்திருங்கள் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகௌடா தெரிவித்தார்.

    கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 15-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 222 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என உற்று நோக்கப்படுகிறது.

    Not ready to accept or reject anything: HD Deve Gowda

    இந்நிலையில் நேற்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நடைபெற்றது. இதில் தொங்கு சட்டசபையே ஏற்படும் என்றும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கணிக்கப்பட்டது.

    மேலும் கௌடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தொங்கு சட்டசபை ஏற்பட்டால் யாருக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்று தேவகௌடாவின் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அவர் கூறுகையில் தற்போது நான் எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ தயாராக இல்லை. 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வரை பொறுத்திருங்கள். உண்மை நிலவரம் அன்று தெரியவரும் என்று கூறினார்.

    வாக்களித்த தினமான சனிக்கிழமை கௌடாவிடம் கேட்டபோது நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். தனித்து ஆட்சி அமைப்போம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    JDS Supremo H.D.Deve Gowda says that he was not ready to accept or reject anything, and asked the media people to wait upto May 15.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X