For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நைட் கொஞ்சம் 'சரக்கு' போடுவது ஒன்னும் தப்பு இல்லையே..புதிய சர்ச்சையில் பீகார் முதல்வர் மஞ்சி

By Mathi
Google Oneindia Tamil News

பாட்னா: நாள் முழுவதும் கடினமாக உழைத்துவிட்டு வருவோர் இரவில் சிறிதளவு மது குடிப்பதில் ஒன்றும் தவறு இல்லை என்று பீகார் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Nothing wrong in consuming alcohol after having dinner: Bihar CM Manjhi

கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது முதலே நாடு முழுவதும் மதுவிலக்கு பற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பீகார் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியோ மது குடிப்பதை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

பீகாரின் தனபூர் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மஞ்சி, நாள் முழுவதும் கடினமாக உழைத்து விட்டு வீடு திரும்பும் ஒருவர் இரவு உணவுக்குப் பின்னர் சிறிது மது குடிப்பதில் ஒன்றும் தவறு ஒன்றும் இல்லை என்று பேசியுள்ளார்.

ஏற்கனவே பதுக்கல்காரர்களை குற்றவாளிகளாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சிலநாட்களுக்கு முன்புதான் மஞ்சி பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Fueling yet another controversy, Bihar Chief Minister Jitan Ram Manjhi has now said that consuming alcohol after having dinner is absolutely fine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X