பெங்களூரு சிறை அருகே உள்ள ஓசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்கும் அடிக்கடி போனார் சசிகலா? தொடரும் பகீர்
பெங்களூரு: பரப்பன அக்ரகார சிறையைவிட்டு வெளியேறி ஓசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்கும் சசிகலா சென்று வந்ததாக போலீஸ் அதிகாரி ரூபா புகார் தெரிவித்துள்ளது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சிறையில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. ஆனால் சிறைவிதிகளை மீறி சாதாரண உடையில் வெளியே சென்று ஷாப்பிங் செய்துவிட்டு திரும்புவதை சசிகலா வழக்கமாக வைத்திருந்தார் என்பதை வீடியோ பதிவுகள் மூலம் அம்பலப்படுத்தினார் முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா.
74 ஆதாரங்கள்
இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்ததால் ஓய்வு பெற்ற அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவிடம் சசிகலா தொடர்பான 74 புதிய ஆதாரங்களை ரூபா தாக்கல் செய்தார்.
ஊழல் தடுப்பு பிரிவு
அத்துடன் அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடமும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு சசிகலாவுக்கு எப்படியெல்லாம் சொகுசு வசதிகள் செய்து கொடுத்தார்கள் என பெரிய புகார் பட்டியலையும் அளித்தார். இது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் ரூபா தாக்கல் செய்திருந்தார்.
5 அறைகள்
சசிகலாவுக்காக பிரத்யேகமாக 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன; இதில் சொகுசு கட்டில், எல்இடி டிவி, மின் அடுப்பு, பாத்திரங்கள் ஆகியவைகளுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன என்பதும் ரூபாவின் புகார்.
ஓசூர் எம்.எல்.ஏ
மேலும் பெங்களூரு சிறைக்கு அருகே உள்ள ஓசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்கும் சசிகலா அடிக்கடி சென்று வந்ததாக ரூபா குற்றம்சாட்டியுள்ளார். சிறையின் நுழைவு வாயில் 1,2 ஆகியவற்ற்றில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருப்பதையும் ரூபா சுட்டிக்காட்டியிருக்கிறார்.