மோடியின் ஆரத்தி நிகழ்ச்சியில் மகனுடன் பங்கேற்ற ஓபிஎஸ்.. வேட்புமனு தாக்கலிலும் பங்கேற்றார்
Recommended Video
வாரணாசி: பிரதமர் மோடி நேற்று வாரணாசியில் நடத்திய ஆரத்தி நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுடன் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவரது மகன் ரவீந்திரநாத்துடன் பங்கேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் மிகப்பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். பனராஸ் இந்து பல்கைகலைக்கழகம் நிறுவிய பண்டித மதன் மோகன் சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.
திறந்த வாகனத்தில் பயணித்த பிரதமர் மோடியை வழியெங்கும் மக்கள் உற்சாக குரல் எழுப்பி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாரணாசியின் லங்கா, அஸி ஆகிய பகுதிகள் வழியாக சுமார் 7 கிலோமீட்டர் சென்ற பேரணி, தசஸ்வமேத படித்துறையில் நிறைவு பெற்றது. அங்கு கங்கை ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்துடன் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்று பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியிலும் மகனுடன் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றார்.