புது பொண்டாட்டியை காணோம்.. 7 வருஷமாக அலைந்த கணவர்.. கடைசியில் வந்துச்சு பாருங்க டிவிஸ்ட்டு!
7 வருடங்கள் கழித்து காணாமல் போன மனைவியை கணவன் தேடி கண்டுபிடித்தார்
புவனேஷ்வர்: புது பொண்டாட்டியை திடீரென காணவில்லை.. 7 வருஷமாக கஷ்டப்பட்டு அவரை தேடி அலைந்தார் கணவர்.. கடைசியில் அங்கதான் கணவனுக்கு ஒரு ட்விஸ்ட் வைத்தார் புது மனைவி!
ஒடிசாவின் பத்குரா பகுதியில் வசித்து வருபவர் அபய சுடர்... இவருக்கும்,மொகரனா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013, பிப்ரவரி 7ந்தேதி கல்யாணம் ஆனது.
2 மாசம் புது மண தம்பதி இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள்.. இதற்கு 2 மாசத்திலேயே கல்யாண பெண்ணை காணோம்.. புது பொண்டாட்டியை காணோம் என்று கணவர் பல இடங்களில் தேடினார்.. கண்டுபிடிக்கவே முடியவில்லை.
வரதட்சணை
அதனால் பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் மனைவி மாயம் என்று புகார் செய்தார்... இவர் புகார் அளித்த உடனேயே, மொகரனாவின் தந்தையும், வரதட்சனைக் கேட்டு கணவர் துன்புறுத்தியதாக ஒரு புகார் தந்தார்... மேலும் மகளை அபயசுடர்தான் கொன்றிருப்பார் என்றும் தன் சந்தேகத்தை கூறினார். இந்த புகார்களை பெற்று கொண்ட போலீசாரும் விசாரணை நடத்தினர்.
ஜாமீன்
பிறகு வரதட்சணை, பெண் மாயம் இவைகளை வைத்து, அபயசுடரை போலீசார் கைது செய்தனர்.. ஜெயிலுக்கும் அனுப்பினர்.. ஒரு மாசத்துக்கு பிறகு அபயசுடர் ஜாமீனில் வெளியே வந்தார்... தப்பே செய்யாத தன்னை இப்படி கைது செய்து ஜெயிலில் உட்கார வைத்துவிட்டார்களே என மனம் புழுங்கினார்.. கைதானதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
தனித்தனி லிஸ்ட்
அதனால் காணாமல் போன மனைவியை தேட ஆரம்பித்தார்.. அவரை தேடி கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்து, அதற்கு பிறகு தன்னை நிரபராதி என நிரூபிக்க முடிவு செய்தார்.. முதலில் மனைவியின் நண்பர்கள் யார் யார், தொடர்பில் இருந்தவர்கள் யார், யார் என தனித்தனியாக லிஸ்ட் எடுத்தார்.. கல்யாணம் ஆகி 2 மாசத்திலேயே ஓடிவிட்டதால், எப்படியும் பழைய காதல் இருந்திருக்கும், அல்லது நண்பர்களை விசாரித்தால் ஏதாவது விளங்கும் என்று அவர்களை தேடி சென்றார்.
உறவு
அதன்படி சிக்கியும் விட்டார் மனைவி மொகரனா.. அந்த நபருடன்தான் ஆரம்பத்தில் இருந்தே தொடர்பில் இருந்துள்ளார்.. கல்யாணம் ஆகியும் உறவை கைவிட விரும்பவில்லை.. அதனால் கள்ளக்காதலனுடன் ஓடிவந்து, தனியாக குடும்பமும் நடத்தி வருவதை பார்த்துவிட்டார் கணவர்.. இது பற்றி போலீசாருக்கும் தகவல் அளித்தார்.
ராஜீவ் 4
அபய சுடர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று மொகரனாவையும் அவரது கள்ளக்காதலன் ராஜீவ்-வையும் கைது செய்தனர். அப்போது மொகரனா அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு ஏற்கனவே ராஜீவ் உடன் தொடர்பு இருந்தது.. வீட்டில் எங்கள் காதல் தெரியும்.. ஆனால் என் பெற்றோர் அதை ஏற்க மறுத்தனர்.. இந்த கல்யாணத்தை கட்டாயப்படுத்தி செய்து வைத்தனர். அதனால்தான் 2 மாசத்திலேயே அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டேன்.. 7 வருஷமா என் முன்னாள் காதலனுடன்தான் வருகிறேன்.. இப்போ எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன" என்றார். இதை கேட்டு போலீசார் மட்டுமல்ல... அபய சுடரும் விக்கித்து நின்றார்!!