நாட்டின் சிறந்த 5 அரசு பள்ளிகளில் இடம் பிடித்தது ஒடிஷாவின் Odisha Adarsha Vidyalaya
புவனேஸ்வர்: நாட்டின் சிறந்த 5 அரசு பள்ளிகளில் ஒன்றாக ஒடிஷாவின் நாட்டின் Odisha Adarsha Vidyalaya இடம் பிடித்திருக்கிறது.
ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஹதியோடா, பலாங்கீர் மாவட்டத்தில் பத்ரசேபா ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் Odisha Adarsha Vidyalaya பள்ளியானது, நாட்டின் தலை சிறந்த அரசு பள்ளிகளுக்கான ஆல் இந்தியா ஸ்கூல் ரேங்கிங் 2020-ல் 5-வது இடத்தைப் பெற்றுள்ளன.
Government Day School category-ல் கஞ்சம் மாவட்டத்தின் ஹதியோடா OAV பள்ளியும் Government boarding school category -ல் பலாங்கீர் மாவட்டத்தின் பத்ரசேபா OAV பள்ளியும் அகில இந்திய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளன.
ஒடிஷா மாநிலத்தில் ஒவ்வொரு வட்டார அளவிலும் ஆங்கில வழியிலான சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்த வேண்டும் என்ன்ற ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உன்னத திட்டங்களில் உதயமானது OAV பள்ளிகள். இந்த OAV பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகளின் சாதனைகளுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் நவீன் பட்நாயக் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
சர்வே
EducationWorld என்ற இதழின் சார்பாக EWISR சர்வே 2021 நடத்தபட்டது. பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட மொத்தம் 11,368 பேரிடம் கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டது. நாட்டின் 28 பெரிய நகரங்களில் இந்த சர்வே நடத்தபட்டது.
14 கேள்விகளின் அடிப்படையில் நாட்டின் 2,000 பிரைமரி மற்றும் செகண்டரி பள்ளிகள் குறித்து சர்வே நடத்தப்பட்டது.
- கல்வி திறன்
- உட்கட்டமைப்பு வசதி
- மாணவர்களின் தனிநபர் திறன்
- -தலைமைத்துவ பண்பு
- பாடத்திட்ட முறை
- பாதுகாப்பு, சுகாதாரம்
- சமூக சேவை
- சர்வதேச தரம்
- பெற்றோர் ஈடுபாடு
- ஆசிரியர் நலனும் மேம்பாடும்
- கட்டணம்
- விளையாட்டு கல்வி
உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன.