15 நாளில் 1,000 படுக்கைகளுடன் இந்தியாவின் 2 மிகப் பெரிய கொரோனா மருத்துவமனைகளை உருவாக்கும் ஒடிஷா
புவனேஸ்வர்: ஒடிஷாவில் 1000 படுக்கைகளுடன் இந்தியாவின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளை 15 நாட்களில் உருவாக்க உள்ளது ஒடிஷா அரசு.
Recommended Video
கொரோனாவின் திடீர் தாக்கம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் பலர் பாதிக்கப்படும் நிலையில் சிகிச்சை அளிப்பதற்கு பெரும் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சீனாவில் கொரோனா தாக்குதல் தொடங்கிய போது உடனடியாக பிரமாண்ட மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதே பாணியில் இப்போது ஒடிஷா அரசும் களம் இறங்கியுள்ளது.
ஒடிஷாவில் 1,000 படுக்கைகளுடனான மருத்துவமனைகளை 15 நாட்களில் உருவாக்க அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.
கொரோனா: இத்தாலியில் ஒரே நாளில் 683; ஸ்பெயினில் 655 பேர் பலி!
450 படுக்கைகளுடன் ஒரு மருத்துவமனையும் 550 படுக்கைகளுடன் மற்றொரு மருத்துவமனையும் உருவாக்கப்பட உள்ளது.