லாரி கவிழ்ந்து சாலையில் ஓடிய எண்ணெய்.. மும்பை-புனே நெடுஞ்சாலையில் கடும் டிராபிக் ஜாம்
புனே: எண்ணெய்லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, மும்பை-புனே எக்ஸ்பிரஸ் ஹை-வே சாலையில் பல கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தின் இரு பெரும் நகரங்களான மும்பை-புனே நடுவே எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று வார இறுதி நாள் என்பதால் பலரும் இந்த சாலை வழியாக வாகனங்களில் பயணிப்பது வழக்கம்.
Plz avoid Pune Mumbai travel on Expressway..Huge traffic jam .. pic.twitter.com/6pcwZtX1S6
— PankajaGopinathMunde (@Pankajamunde) February 20, 2016
இந்நிலையில், கண்டாலா பகுதியில் இன்று காலை எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரியொன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதனால் சாலையெங்கும் எண்ணெய் பெருக்கெடுத்து ஓடியது. தீ விபத்து ஏற்படும் அபாயம் இருந்ததால் வாகனங்கள் எதுவும் அந்த வழியாக போக முடியவில்லை.
இதனால் பல கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு பழைய ஹைவே பாதையை பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த பாதை ஒட்டுமொத்த வாகனங்களையும் தாங்க முடியாமல் நெரிசலில் சிக்க ஆரம்பித்தது. இருப்பினும் மெதுவாக ஊர்ந்து செல்ல முடிந்தன.