ஓமைகாட், சல்மான் கானுக்கு எதிராக ஐஸ்வர்யா ராய் இப்படி செய்துள்ளாரா?
மும்பை: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகை ஐஸ்வர்யா ராய் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
தென்னமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான யோகேஸ்வர் தத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சல்மான் கானை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குமாறு கூறி ஆன்லைனில் விண்ணப்ப போராட்டம் துவங்கப்பட்டுள்ளது.
அந்த போராட்டத்தை துவங்கியுள்ளது வேறு யாரும் இல்லை சல்மான் கானின் முன்னாள் காதலியான நடிகை ஐஸ்வர்யா ராய் தான். விண்ணப்ப போராட்டத்தை துவங்கியுள்ளவர் பெயர் ஐஸ்வர்யா ராய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது நடிகை ஐஸ்வர்யா ராயா அல்லது அவர் பெயரில் வேறு யாராவது செய்த வேலையா என்பது இன்னும் தெரியவில்லை.