"ஏப்ரல் 1 கெஜ்ரிவால் தினம்"... டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!
டெல்லி: ஏப்ரல் முதல் நாளான இன்று விளையாட்டாக முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. ஆனால், டெல்லியில் அம்மாநில முதல்வர் போட்டோவுடன், ‘கெஜ்ரிவால் தினம்' என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போஸ்டர்களை ஒட்டியது வலதுசாரியைச் சேர்ந்த ‘பகத் சிங் கிராந்தி சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. முட்டாள்கள் தினமான இன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அம்மாநில மக்களுக்கு ‘கெஜ்ரிவால் தினம்' என வாழ்த்து தெரிவிப்பதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த போஸ்டரில் கெஜ்ரிவாலின் பழைய புகைப்படம் ஒன்று உள்ளது. அதில் அவர் சோகமாக காட்சியளிக்கிறார். இந்த போஸ்டர்கள் புகைப்படங்களாகவும் இணையத்தில் பரவி வருகிறது.
ஆம் ஆத்மி கட்சிக்குள் தலைவர்கள் இடையே பிளவு ஏற்பட்டு உள்ளநிலையில் இவ்வகையான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.