For Daily Alerts
Just In
ஹிமாச்சல பிரதேசம்: பனிச் சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி.. 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கின்னார்: ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த பனிச் சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் பலியாகிவிட்டார். மேலும் பனிச்சரிவில் சிக்கிய 5 வீரர்களை தேடும் பணி தீவிரமாகியுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் வெப்பநிலையில் மைனஸில் செல்கிறது. இதனால் அங்கு உறைபனி அதிகரித்துள்ளது. இதனால் சிம்லா, குலு , மணாலியில் பனி அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கின்னார் மாவட்டத்தில் டோக்ரி நாலா என்ற பகுதியில் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை 11 மணிக்கு பனிச்சரிவு ஏற்பட்டது.
அதில் 6 வீரர்கள் சிக்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் 5 வீரர்களை தேடும் பணி தீவிரமாகியுள்ளது. இந்திய - திபெத் எல்லைப்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
English summary
One army jawan has died and five others are trapped after an avalanche of Himachal Pradesh's Kinnaur district.
Story first published: Wednesday, February 20, 2019, 19:36 [IST]