காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீச்சு.. ஒருவர் பலி.. 13 பேர் காயம்
ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதால் ஒருவர் பலியாகிவிட்டார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு எழுந்துள்ளது.
இந்த நிலையில் வடக்கு காஷ்மீரில் ஷோபோர் நகரில் பரபரப்பான மார்க்கெட் பகுதியில் கடந்த வாரம் பேருந்தின் மீது தீவிரவாதிகளால் வீசி எறியப்பட்ட கையெறி குண்டுகளால் 20 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்து முடிந்து ஒரு வார காலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீநகரில் மௌலானா ஆசாத் சாலையில் ஒரு மார்க்கெட்டில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் 13 பேர் காயமடைந்தனர். ஒருவர் கொல்லப்பட்டார்.
வாட்ஸ் அப் மூலம் ஒட்டு கேட்பு- இஸ்ரேல் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்க ராமதாஸ் வலியுறுத்தல்
இறந்தவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரை சேர்ந்தவர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.