காவிரியில் நீர் திறப்புக்கு எதிர்ப்பு- மாண்டியாவில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை முயற்சி #cauvery
பெங்களூரு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 15,000 கன அடி நீரை கர்நாடகா நள்ளிரவில் தமிழகத்துக்கு திறந்துவிட்டது. அப்போது சூரி என்ற 50 வயது விவசாயி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.
Cauvery river water issue: Farmer attempts suicide by jumping into a canal in Mandya, rushed to hospital #Karnataka pic.twitter.com/aByASRLYt0
— ANI (@ANI_news) September 7, 2016
இந்த நிலையில் மாண்டியாவில் இன்று மற்றொரு விவசாயி இன்று காவிரி கால்வாயில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். அவரை சக போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கன்னட அமைப்புகளின் தொடர் போராட்டத்தால் மாண்டியா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விவசாயிகளின் தற்கொலை முயற்சிகள், போராட்டத்தை தீவிரப்படுத்தும் என தெரிகிறது