நாயுடுவுக்கு ஒரு லட்டு... ஜெகனுக்கு ஒரு லட்டு பார்சல்.. ஒருத்தர் கிங்மேக்கர்.. இன்னொருத்தர் முதல்வர்
Recommended Video
அமராவதி: சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திராவின் முதல்வாக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள தேசிய ஊடகங்கள், மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் கிங்க் மேக்கர் ஆக அவரால் ஆகமுடியாது என்று கூறியுள்ளன.
நியூஸ் 18-ஐபிஎஸ்ஒஎஸ் ஆந்திராவில் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளது. அதேநேரம் ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
ரிபப்ளிக் -சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 14 இடங்களையும், தெலுங்குதேசம் 11 இடங்களையும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆந்திராவில் ஒரு இடத்தில் கூட வெல்லாது என்றும் கூறப்பட்டுள்ளது.
சுலேகா எதுக்கு காப்பை கழட்டினா... இப்போ பாருங்க அருந்ததி அவளுக்குள்ள...!
தெலுங்குதேசம் வீழ்ச்சி
இந்தியா டுடே- ஆக்சிஸ் போல் நடத்திய கருத்துக்கணிப்பில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 18 முதல் 20 இடங்களை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும், தெலுங்குதேசம் 4 முதல் 6 இடங்களை மட்டுமே வெல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்குதேசம்
சாணக்யா-நியூஸ் 24 வெளியிட்ட கருத்துக்கணிப்பில், தெலுங்குதேசம் கட்சி 17 இடங்களையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 8 இடங்களையும் வெல்லும் என தெரிவிக்கப்பபட்டுள்ளது.
நாயுடுவுக்கு வாய்ப்பு
இதனிடையே ஆந்திரா சட்டமன்ற தேர்தல் குறித்த 2 முக்கிய ஊடகங்களின் கருத்துக்கணிப்பின் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.அதேநேரம் மற்ற ஒரு கணிப்பில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாயுடுவுக்கு சாதகம்
லகபதி ராஜகோபால் வெளியிட்ட ஆந்திர சட்டமன்ற தேர்தல் கணிப்பில் தெலுங்குதேசம் 90 முதல் 110 இடங்களை கைப்பற்றும் என்றும், ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் 65 முதல் 79 இடங்களை வெல்லும் என தெரிவித்துள்ளார். ஆர்ஜி பிளாஸ் சர்வேயில் தெலுங்குதேசம் 90 முதல் 110 இடங்களை கைப்பற்றும் என்றும், ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் 65 முதல் 79 இடங்களை வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா டுடே கணிப்பு
அதேநேரம் இந்தியா டுடே-ஆக்சிஸ் போல் கணிப்பில், தெலுங்கு தேசம் 37 முதல் 40 இடங்கள் மட்டுமே பெறும் என்றும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 130 முதல் 135 இடங்கள் வரை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாயுடுவின் கனவு
ஊடகங்களின் பெரும்பாலான கணிப்புகளின் படி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் மீண்டும் முதல்வராக ஆக முடிந்தாலும், மத்தியில் ஆட்சியமைக்க கிங் மேக்கராக இருக்க முடியாது என்றும் ஜெகன் அந்த ஆசையை காலி செய்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது. எனவே சந்திரபாபு நாயுடுவின் ஆசை நிறைவேறுமா அல்லது கணிப்புகள் பலிக்குமா என்பது மே 23ம் தேதி தெரிந்துவிடும்.