For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்.. இந்திய வீரர் வீரமரணம்

காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மஷில் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்ததிற்கு பிறகும், அடிக்கடி துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை திடீர் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.

One soldier lost his life in Jammu and Kashmir

தீவிரவாதிகளை ஒழித்து கட்ட பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தாக்குதலை அரங்கேற்றி உள்ளது.

அதனையும் மீறி, தீவிரவாதிகளின் சதி திட்டங்களை முறியடித்து வரும் இந்திய ராணும் சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற அதிரடி தாக்குதல்களையும் நடத்த தயங்கியதில்லை.

சுமூக பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் இஸ்லாமிய நாடு என்று இல்லாமல், மதசார்பற்ற நாடாக பாகிஸ்தான் மாற வேண்டும் என்று இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
One soldier lost his life in a ceasefire violation by Pakistan in the Machil sector of the Kupwara district Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X