வெங்காய லாரியை கடத்தி... ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெங்காயங்கள் திருட்டு.. சிவபுரியில்!
ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெங்காயங்கள் திருடப்பட்டுள்ளன
Recommended Video
போபால்: வெங்காயம் ஏற்றி கொண்டு வந்த லாரியை மடக்கி கடத்தி சென்று, அதில் இருந்த 20 லட்சம் மதிப்புள்ள வெங்காயங்களை மர்மநபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இப்போதைக்கு வெங்காயம் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. சாம்பார் வெங்காயம் ரூ.160க்கு மேல் விலை உள்ளது. இதனால் ஓட்டல்களில் வெங்காயத்திற்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் அனைத்து குடும்பங்களிலும் வெங்காய விலை அதிர்ச்சியை தந்துள்ளது.
உடனடியாக வெங்காயம் விலையை குறைக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் வெங்காயங்களை கொள்ளை அடிக்கும் சம்பவமும் நடந்து வருகிறது.
நேற்று, மேற்கு வங்காளத்தின் பசுதேவ்பூர் என்ற பஜாரில் ஒரு கடையில், 3 மூட்டை வெங்காயம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. அதேபோல, மத்திய பிரதேசத்தின் சிவபுரி நகரில் வெங்காயம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றுள்ளது.. இப்போது அந்த லாரியை காணோம் என்கிறார்கள்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: ஓபிசி ஜாதிகளுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்குவோம்- அமித்ஷா வாக்குறுதி
இந்த லாரியானது, நாசிக் நகரில் இருந்து கோரக்பூர் நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறது.. மேலும் இதில், ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெங்காயங்கள் இருந்துள்ளன. அதனால் லாரியை காணாமல், அதன் ஓனர் பிரேம் சந்த் சுக்லா என்பவர் போலீசில் புகார் தந்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசாரும் லாரியை தேடி வந்த நிலையில், சம்பந்தப்பட்ட லாரியை கண்டுபிடித்தனர். ஆனால், அதில் இருந்த வெங்காயங்கள் எல்லாம் திருடப்பட்டு, வெறும் லாரி நிறுத்திவிட்டு சென்றுள்ளனர் மர்மநபர்கள். இதையடுத்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.