குடும்பத்தார், பேரக்குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி தனது குடும்பத்தாருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.
கேரள மக்கள் அனைவரும் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். கேரள மக்கள் இன்று அதிகாலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து வாசலில் அத்தப்பூ கோலம் போட்டனர். மதியம் ஓணம் சாத்யா எனப்படும் விருந்தை சாப்பிட்டனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மாநில சுற்றுலாத் துறை சார்பில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் கலாச்சார நிகழ்ச்சிகள் வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து நடக்கும்.
#Flowers, fun and #togetherness! #Thiruonam celebrations with #family and #grandchildren. pic.twitter.com/63n6vfZs6z
— Oommen Chandy (@Oommen_Chandy) August 28, 2015
இந்நிலையில் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தாருடன் கொண்டாடினார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பூக்கள், மகிழ்ச்சி, ஒன்றாக இருத்தல். குடும்பத்தார் மற்றும் பேரக்குழந்தைகளுடன் திருவோணம் கொண்டாட்டம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.