பாஜகவிற்கு எதிராக மாவோயிஸ்ட்டுகளை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன.. அருண் ஜெட்லி பகீர்
பாஜகவிற்கு எதிராக மாவோயிஸ்ட்டுகளை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: பாஜக அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட்டுகளை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளதாக, போலீஸார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எதிர்கட்சிகளை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், கடந்த சில நாட்களாக மாவோயிஸ்ட் பயங்கரவாத நடவடிக்கைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன.
இந்த அமைப்பின் ஆதிக்கம் இல்லாத பகுதிகளிலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இது தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிரான மாவோயிஸ்டுகளை சில அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகின்றன.
இது சரியான நடவடிக்கை இல்லை என்பதை அக்கட்சிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த பயங்கரவாத செயல்கள் விரைவில் ஒடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.