11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஓபிஎஸ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுத்தாக்கல்
11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அவர்கள் 1 1 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 11 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
திமுக தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். குட்கா விவகாரம் தொடர்பாக காலையில் திமுக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.