அம்ருத்.... ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.7,290 கோடி ஒதுக்கீடு
டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ரூ.7,290 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க ரூபாய் 3,205 கோடியும், அம்ருத் திட்டத்திற்காக ரூபாய் 4,091 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக உருவாகும் 20 ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியலில் புவனேஸ்வர், புனே, அகமதாபாத், சென்னை மற்றும் போபால் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக 40 ஸ்மார்ட் சிட்டிகள் இரண்டாம் கட்டமாக உருவாக்கப்படுகிறது. மீதமுள்ள ஸ்மார்ட்சிட்டிகள் 3 ஆம் கட்டமாக பின்னர் உருவாக்கப்படும்.
அம்ருத் திட்டமானது குடிநீர் சப்ளை, கழிவுநீர் மேலாண்மை, நகர்புற போக்குவரத்து வசதிகள், நகரங்களில் வழங்கப்பட வேண்டிய பிற அடிப்படை வசதிகளை வழங்குவதற்காக பிரதமர் மோடி ஜூன் 2015 இல் அம்ருதா திட்டத்தை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.