ப.சிதம்பரத்துக்கு பாக். உளவு அமைப்பு, நக்சல்களுடன் தொடர்பு இருக்கலாம்.. காஷ்மீர் பாஜக தலைவர் பகீர்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370வது பிரிவை அமல்படுத்த கோரி போராட்டங்கள் நடத்தப்படும் என்று அம்மாநில அரசியல் தலைவர்கள் அறிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.
பாஸ்வான் மகனுக்கு இன்னிக்கு முட்டுக் கொடுங்க-படகு மூழ்கும்போது தெரியும்-பாஜகவுக்கு ஜேடியூ எச்சரிக்கை
370வது பிரிவும் ப.சி. கருத்தும்
இதனை வரவேற்ற ப. சிதம்பரம், 370வது பிரிவை அமல்படுத்த காங்கிரஸ் ஆதரவு தரும் என்றார். ப. சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா தமது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:
ப. சிதம்பரத்துக்கு பாக். தொடர்பாம்
ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை அமல்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான், சீனாவின குரலில் பேசுகிறார் ப.சிதம்பரம். அவருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, மற்றும் நக்சல்களுடன் தொடர்பு இருக்கலாம். தேசத்துக்கு எதிராக ப. சிதம்பரம், திக்விஜய்சிங் ஆகியோர் பேசுகின்றனர்.
சோனியா மன்னிப்பு கேட்கனும்
ப.சிதம்பரம், திக்விஜய்சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தேசத்துக்கு எதிராக பேசிவருவதற்கு அனுமதித்திருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி இந்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டு மக்களின் முதுகில் குத்துவதைத்தான் காங்கிரஸ் வாடிக்கையாக வைத்திருக்கிறது.
|
370வது பிரிவால் ரத்த ஆறு ஓடியது
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவானது ஜம்மு காஷ்மீரில் ரத்த ஆறு ஓடக் காரணமாக இருந்தது. பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் இந்த 370வது பிரிவுதான் உருவாக்கியது. இவ்வாறு ரவீந்தர் ரெய்னா கூறியிருக்கிறார்.