கதை விட்ட நிர்மலா சீதாராமன்.. புள்ளி விவரத்தோடு அம்பலப்படுத்திய ப.சிதம்பரம்
Recommended Video
டெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய ஒரு அரைகுறை தகவலை, அம்பலத்தில் போட்டு உடைத்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், மாநிலங்கள்தான் எண்ணை பொருட்கள் மீது அதிகப்படியான வரியை விதிப்பதாகவும், பெட்ரோல், டீசல் மீது மாநிலங்கள் விதிக்கும் வரியில் பாதியைதான் மத்திய அரசு விதிப்பதாகவும் தெரிவித்திருந்தார் நிர்மலா சீதாராமன்.
Defence Minister Sitharaman says that Centre collected only half the amount States collected as taxes on petrol and diesel. Fact-check her statement.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 19, 2018
இதுகுறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் தளத்தில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். நிர்மலா சீதாராமன் கூறியது உண்மையா என செக் செய்யலாமா என கேள்வி எழுப்பியுள்ள சிதம்பரம், "2017-18ம் ஆண்டில், மத்திய அரசு ரூ.2,84,442 கோடி வரி வசூல் செய்துள்ளது. மாநிலங்கள் வசூலித்தது ரூ. 2,08,893 கோடி. எது அதிகம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
In 2017-18, Centre collected Rs 2,84,442 crore. States collected
— P. Chidambaram (@PChidambaram_IN) September 19, 2018
Rs 2,08,893 crore. Which is more?