For Daily Alerts
Just In
173 இந்திய கைதிகளை விடுவிக்கிறது பாகிஸ்தான்
டெல்லி: பாகிஸ்தானில் சிறைக் கைதிகளாக உள்ள 173 இந்தியர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்நாட்டு சிறையில் இருந்து 173 இந்திய கைதிகளும் விடுதலை செய்யப்பட உள்ளனர் என்ற இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் சையத் அக்பரூதீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இந்த் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி சுமார் 526 இந்தியர்கள் பாகிஸ்தானின் சிறையி்ல அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 173 பேர் வரும் 16 ஆம்தேதி விடுவிக்கப்பட உள்ளனர் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. வாகா எல்லைக்கு வரும் அவர்களை இந்திய அதிகாரிகள் வரவேற்க உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
Comments
English summary
The Ministry of External Affairs on Wednesday confirmed that 173 Indian prisoners, who are currently being held in Pakistan, will be released by the Islamic Republic and sent home on February 16