அன்று பாம்பு.. இன்று வெடிகுண்டுகள் நிரப்பிய ஜாக்கெட். .. பிரதமர் மோடிக்கு பாக். பாடகி கொலை மிரட்டல்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பிரபல பாடகி ரபி பிர்ஸாடா அன்று பாம்புகளை ஏவி பிரதமர் மோடியை கொல்லப்போவதாக மிரட்டிய நிலையில் இன்று வெடிகுண்டுகள் நிரம்பிய ஜாக்கெட்டை அணிந்து மிரட்டி உள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி ரபி பிர்ஸாடா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் பாடகி ரபி பிர்ஸாடா கை நிறைய விஷ பாம்புகளை வைத்திருந்ததுடன் அவரை சுற்றி மலைப்பாம்புகளும், ஒரு முதலையும் இருந்தது.'
பிரதமர் மோடியை பாம்பு, முதலைகளை வைத்து கொல்லப்போகிறேன்.. வீடியோ வெளியிட்ட பாக். பாடகி
|
மோடிக்கு மிரட்டல்
அந்த பாம்புகள், முதலைகளோடு விளையாடியபடி அன்றைக்கு பேசிய பாடகி ரபி பிரிஸ்டா, " நான் ஒரு காஷ்மீர் பெண் மணி, இந்தியாவுக்கு வர தயாராக உள்ளேன். நீங்கள் (மோடி) காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் இந்த பாம்புகள், முதலைகள் எல்லாம் உங்களுக்காக நான் வைத்திருக்கும் பரிசு. நரகத்தில் உயிரிழக்க தயாராக இருங்கள். என் நண்பர்கள் உங்களுக்கு விருந்து வைப்பார்கள் என கூறியிருந்தார்.
|
காஷ்மீர் செல்வேன்
இந்நிலையில் தற்போது பாடகி ரபி பிரிஸ்டா, தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த அக்டோபர் 21ம் தேதி ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். அதில் வெடிகுண்டுகள் நிரம்பிய ஜாக்கெட்டை அணிந்து காணப்படும் அவர் பிரதமர் மோடியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு, தான் காஷ்மீரின் மகள் என கூறி மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகங்கள் பதிவிட்டுள்ளார். இப்படியே காஷ்மீருக்கு செல்லப்வோதாகவும் கூறியுள்ளார்.
இந்தியர்கள் பதிலடி
இதற்கு இந்தியர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். அந்த பதிவுக்கு கீழே இந்தியர் வருவர் "அற்புதம் பாகிஸ்தானின் பாரம்பரியமிக்க தேசிய உடையில் நீங்கள் இருக்கிறீர்கள் என கூறியுள்ளார்.
இம்ரான்கான்
இன்னொருவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை டேக் செய்து இதனை உங்கள் தேசிய உடையாக அங்கீகரிக்க ஆவண செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.