For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்.. இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கி சூடு

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு பகுதியின் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

நேற்று மாலை, சிறிய ரக குண்டுகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்த அத்துமீறிய தாக்குதலில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pakistan troops fire at Indian positions on LoC

முன்னதாக கடந்த 20ம் தேதி , இதே பகுதியில் உள்ள நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். யூரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பிறகு இருநாடுகளிடையேயான உறவில் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்தடுத்து இரு முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்து மீறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப்படை நேற்றிரவு பாக். எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநில எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தை குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது.

English summary
Pakistani troops violated the border ceasefire in the same sector of Kashmir, targeting Indian army positions with small firearms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X