For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 5 செருப்படி: பஞ்சாயத்தார் தண்டனை கொடுத்திட்டாங்களாமாம்!

By Siva
Google Oneindia Tamil News

சன்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த நபருக்கு 5 செருப்படி கொடுக்க பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கும் முன்பு கிராம பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர்.

பஞ்சாயத்தார் பெண்ணை பலாத்காரம் செய்த நபருக்கு 5 செருப்படி மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். இது பற்றி போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்த சம்பவம் பற்றி காங்கிரஸ் தலைவர் ஷர்மிஸ்தா முகர்ஜி கூறுகையில்,

ஒருவரை செருப்பால் அடித்தும், அபராதம் கட்டுமாறு கூறியும் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை நியாயப்படுத்த முடியாது. இது தவறான தீர்ப்பு. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். பஞ்சாயத்தார் சட்டத்தை மதிக்க வேண்டும். இது காட்டு ஆட்சி போன்று உள்ளது. நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை என்றார்.

English summary
A panchayat in Haryana has given a bizarre punishment to a rapist by ordering to beat him with shoes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X