For Daily Alerts
Just In
அத்வானி குண்டுவைப்பு வழக்கில் தொடர்புடைய 'பறவை' பாட்ஷா கேரளாவில் கைது
புனலூர், கேரளா: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பாஜக மூத்த தலைவர் அத்வானி சென்ற பாதையி்ல பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய பறவை பாட்ஷா என்ற நபர் கேரள மாநிலம் புனலூரில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புனலூரில் இவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து தமிழக சிபிசிஐடி போலீஸ் குழு அங்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த பாட்ஷாவைக் கைது செய்துள்ளது. தற்போது அவரை நெல்லைக்குக் கொண்டு வருகின்றனர்.
மேலப்பாளையம் வெடிகுண்டு வழக்கு, திருமங்கலத்தில் அத்வானி பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கு உள்ளிட்டவற்றில் பாட்ஷாவுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.
Comments
English summary
'Paravai' Basha, an accused in many cases including Advani pipe bomb case has been nabbed in Kerala.