தெலுங்கானா விவகாரம், மீனவர் பிரச்சினை இன்றும் முடங்கியது நாடாளுமன்றம்
வருகிற மே மாதத்துடன் நடப்பு நாடாளுமன்ற மக்களவையின் பதவி காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் 15வது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் கடந்த 5ம் தேதி தொடங்கியது.
மக்களவை இன்று காலை கூடியவுடன் தமிழக மீனவர் பிரச்னையை எழுப்பியும், தெலங்கானா தனி மாநில உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். அவை முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் கூடிய போதும் அமளி நீடித்ததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் மீராகுமார் உத்தரவிட்டார். மக்களவை தொடர்ந்து 5-வது நாளாக முடங்கியது.
இதே போல் மாநிலங்களவையிலும், கடும் அமளி நீடித்தது. அவை கூடியவுடன் தெலங்கானா விவகாரம் எதிரொலித்தது. முதலில் 11.11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடிய போது, தமிழக மீனவர்கள் பிரச்சினையை முன்வைத்து அதிமுக எம்.பி. மைத்ரேயன், அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்.