For Daily Alerts
Just In
ஜூலை 3 ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்! வரிந்து கட்டத் தயாராகும் எதிர்கட்சிகள்!!
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் ஜூலை 3 ஆம் தேதி தொடங்க உள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை மாதம் 3 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆகஸ்ட் 2வது வாரம் வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டத்தொடர் நடைபெறும் தேதி குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்.
லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் உதவிய விவகாரம், விவசாயிகள் தற்கொலை பிரச்சினை, உள்ளிட்ட பிரச்சினைகளை கையிலெடுத்து நாடாளுமன்றத்தை முடக்க தற்போதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.
Comments
English summary
Parliament session may commence on july 3rd
Story first published: Friday, June 19, 2015, 22:59 [IST]